அக்கரைப்பற்று மகளிர் மகா சங்கத்தின் மகளிர் தின சிறப்பு நிகழ்வு
அக்கரைப்பற்று பிரதேச செயலகத்ததிற்குட்பட்ட மகளிர் மகா சங்கத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை (17) கொக்கோ கார்டனில் வெகுவிமர்ச்சியாகவும் கோலாகலமாகவும் நடாத்தப்பட்டது.
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியல் பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா கலந்து கொண்டார்.
அக்கரைப்பற்று மகளிர் மகா சங்கத்தின் பிரதானி, தேசிய மக்கள் சக்தியின் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் சகோதரி ஆயிஷா அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச செயலகத்தின் கணக்காளர் றஹுமான், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் தமீம், தேசிய மக்கள் சக்தியின் அக்கரைப்பற்று ஒருங்கிணைப்பாளர் தோழர் அபு சஹீட்
மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளரும் மாநகர சபையின் உறுப்பினருமான ரமீஸ் மொஹியடின் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளர் ஆசிரியர் ஆரிப், மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் வாசனா, அக்கரைப்பற்று மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சகோதரி ரேகா உட்பட மகளிர் மகா சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.











(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
