பொல்கொல்ல நீர்த்தேக்க வான் கதவுகள் திறப்பு
மத்திய மலை நாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) இரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 08 வான் கதவுகள் நேற்றையதினம் இரவு முதல் திறக்கப்பட்டிருந்தன.
எனினும், இன்று (03) திங்கட்கிழமை மதியம் முதல் ஐந்து வான் கதவுகள் ஒன்று ஏழு அடிகள் வீதம் திறக்கப்பட்டுள்ளதாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் பொறுப்பதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் மகாவலி ஆற்றின் ஊடாக விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 28,500 கன அடி நீர் திறந்து விடப்படுவதாகவும் அவ்வலுவலகம் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் அதிக மழை காரணமாக எதிர்வரும் நாட்களிலும் வான் கதவுகள் அடிக்கடி திறக்கப்படலாம் எனவும், அதனால் வெளியேற்றப்படும் நீரின் அளவு பெருமளவில் அதிகரிக்கக்கூடும் எனவும், எனவே மகாவலி ஆற்றை அண்டிய பகுதிகளில் வசிப்பவர்களும் ஆற்றைப் பயன்படுத்துபவர்களும் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும் பொல்கொல்ல நீர்த்தேக்கப் பொறுப்பதிகாரி அலுவலகம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.
