உலகம்

டிரம்ப் கலந்து கொண்ட நிகழ்வில் துப்பாக்கி சூடு; கைதாகிய சந்தேக நபர்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்குபற்றி வருடாந்த இரவு விருந்த நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வொஷிங்டனில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவரது,மனைவி ஆகியோர் பாதுகாப்பாக வெளியே கொண்டுவரப்பட்டுள்ளனர்.

அங்கிருந்த யாருக்கும் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்ட இந்த நிகழ்வு அடுத்த 30 நாட்களுக்குள் மீண்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *