இரண்டாவது கச்சா எண்ணெய் கப்பல் இன்று நாட்டை வந்தடையும்
இரண்டாவது கச்சா எண்ணெய் (Borethel) கப்பல் இன்று (26) பிற்பகல் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை கனிம எண்ணெய் மொத்த களஞ்சிய முனைய நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு போர் ஆரம்பமானதன் பின்னர் நாட்டிற்கு வருகை தரும் இரண்டாவது கச்சா எண்ணெய் கப்பல் இதுவாகும்.
இந்தக் கப்பல் மூலம் 90,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக அதன் மேலாண் பணிப்பாளர் கலாநிதி மயூார நெத்திகுமார தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, ஏப்ரல் மாதத்திற்குத் தேவையான கச்சா எண்ணெய் அளவு இன்று வருகை தரும் கப்பலுடன் பூர்த்தியடைந்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
