உள்நாடு

எதிர்கட்சித் தலைவரின் மீலாதுன் நபி தின வாழ்த்துச் செய்தி

மனிதநேயத்திற்கு முன்னால் இனம், மதம் மற்றும் ஏனைய பேதங்களை விட பரஸ்பர கௌரவம், நீதி நியாயம், கருணை மற்றும் சகோதரத்துவம் என்பன மதிக்கத்தக்கனவாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

புனித மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு அவர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பன்முகத்தன்மை நம்மைப் பிரிப்பதற்கான காரணமாக இருக்கக்கூடாது, மாறாக அதனை இலங்கையின் பலமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு, ஏனையோர்களினது உரிமைகளையும் நம்பிக்கைகளையும் மதித்து, எந்தவொரு மக்கள் பிரிவினரையும் கைவிடாத சமூகமொன்றைக் கட்டியெழுப்புவது நமது பொதுப் பொறுப்பாகும். முஹம்மது நபி அவர்கள் காட்டித் தந்த அமைதியினதும், நீதி நியாயத்தினதும், நல்லிணக்கதினதும் பாதை இலங்கைக்கு புதிய ஒளியாகட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம் மக்களுக்கும் இனிய மீலாதுன் நபி தின நல்வாழ்த்துக்கள் என எதிர்க்கட்சி தலைவர் தனது வாழ்த்துச் செய்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *