உள்நாடு

பல்கலைக்கழக பதிவுகள் 14 வரை ஏற்பு

2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், சாதாரண அனுமதியின் கீழ் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பதிவு தற்போது ஆரம்பமாகியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கான மேன்முறையீடுகள் ஆகஸ்ட் 21 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலதிக விபரங்களுக்கு www.ugc.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *