உள்நாடு

மீன்பிடி கடற் பயணங்களைத் தவிர்க்குமாறு வேண்டுகோள்

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு மறு அறிவித்தல் வரும் வரை மீன்பிடி நடவடிக்கைகளிலோ அல்லது கடற்பயணங்களிலோ ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த எச்சரிக்கையானது நாளை மாலை 8.00 மணி வரை அமுலில் இருக்கும்.

காற்றின் வேகம் மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், இப்பகுதிகளில் கடல் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.

கடலில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக, கடற்படை மற்றும் மீன்பிடிச் சமூகத்தினர் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *