உள்நாடு

இன்று “புளு மைக்ரோ மூன்” வானில் தோன்றும்


சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (31) வானில் அரிய “புளு மைக்ரோ மூன்” நிகழ்வு தோன்றவுள்ளதாக வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் ஏற்படும் “புளு மூன்” நிகழ்வும், சந்திரன் புவியிலிருந்து மிகத் தொலைவில் இருக்கும் “மைக்ரோ மூன்” நிகழ்வும் இணைவதால் இந்த அரிய காட்சி உருவாகின்றது.

இந்த நிலையில், நிலா வழக்கத்தைவிட சுமார் 6% சிறியதாகவும் 10% மங்கலாகவும் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது நீல நிறத்தில் தோன்றாது என்றும், வெளிறிய வெள்ளை அல்லது பொன்னிற – ஆரஞ்சு நிறத்தில் காணப்படும் என்றும் நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.

இந்த அரிய நிகழ்வு இந்தியா உள்ளிட்ட ஆசிய-பசிபிக் பகுதிகளில் இன்று மாலை முதல் காணக்கூடியதாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இத்தகைய “புளு மைக்ரோ மூன்” நிகழ்வு மீண்டும் 2053 ஆம் ஆண்டில்தான் நிகழக்கூடும் என்பதால், வானியல் ஆர்வலர்கள் இதை தவறவிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *