உள்நாடு

இலங்கை வந்தடைந்தார் இந்திய துணை ஜனாதிபதி

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வருகை தந்துள்ளார். அவருடன் 49 பேர் கொண்ட உயர்மட்டத் தூதுக்குழுவினரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

தனது விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் அவர் முக்கியமான இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

குறிப்பாக, ‘டித்வா’ சூறாவளி புனர்வாழ்வு பணிகள் மற்றும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்த விஜயத்தின் போது கையெழுத்திடப்படவுள்ளன.

அத்துடன், அவர் பல்வேறு அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களையும் நேரில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *