Saturday, May 9, 2026
Latest:
உள்நாடு

ஜெனீவா தீர்மானம் குறித்து பாராளுமன்றில் விவாதம்; ஆளும் கட்சி இணக்கம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணை தொடர்பில் சபையில் விவாதம் நடத்துவதற்கு ஆளுங்கட்சி இணங்கியுள்ளது.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் சபாநாயகர் தலைமையில் கூடியது.

இதன்போது ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம், இலங்கை அரசாங்கம் ஏன் வாக்கெடுப்பு கோரவில்லை, உள்ளக பொறிமுறையை வலுப்படுத்துவதற்குரிய திட்டங்கள் எவை என்பன உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் விசேட உரையாற்றினார்.

அவரின் உரையின் பின்னர் இது சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த இடமளிக்கப்பட வேண்டும் என்று எதிரணி பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க கோரிக்கை விடுத்தார்.

அதற்கு ஆளுங்கட்சி இணங்குகின்றது என்று வெளிவிவகார அமைச்சர் பதிலளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *