Thursday, July 10, 2025
Latest:
உள்நாடு

எப்பாவல வாகன விபத்தில் நான்கு பேர் காயம்

எதம்புத்தேகம கல்நேவ வீதியில் எப்பாவல சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக எப்பாவல பொலிசார் தெரிவித்தனர்.

லொறி ஒன்றின் முன்புற சக்கர மொன்றின் காத்து வெளியேறியதில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி வீதியின் வலது பக்கமாக திரும்பி எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டி மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் , துவிச்சக்கர வண்டியின் செலுத்துவதும் , லொறியில் பயணித்த இருவரும் காயமடைந்து சிகிச்சைக்காக தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளனர்.

(எம்.ரீ.ஆரிப்- அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *