உள்நாடு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது பற்றி மே தினத்தன்று அறிவிக்கும் ரணில்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரா என்று பலத்தரப்பிலும் எழுப்படும் கேள்விக்கு எதிர்வரும் மே மாதம் நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் மேதின விழாவின் போது ஜனாதிபதி பதிலளிப்பார் என ஐ.தே.க தரப்பு தெரிவிக்கின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடுவது பற்றி இதுவரை உறுதியாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எதிர்க்கட்சி தரப்பில் ஐக்கிய மக்கள் சக்தி தரப்பில் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று கூறி வருகின்றார்கள்.

இந்தப் பிண்ணயில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரா என்பது பற்றி மே மாதத்தில் மேதினக் கூட்டத்தில் அறிவிப்பார் என கட்சி வட்டாரங்களில் தெரிவித்துள்ளனர். இம்முறை ஐ.தே.க மேதினக் கூட்டத்திற்கு 1 இலட்சத்திற்கும் மேற்பட்டோரை அழைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *