உள்நாடு

பிறை தென்பட்டது. நாளை பெருநாள்

ஹிஜ்ரி 1445 ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று 09 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இதன்போது நாட்டில் பல பாகங்களிலும் ஷவ்வால் மாத தலைப் பிறை தென்பட்டதால் இலங்கை வாழ் மக்கள் புனித நோன்புப் பெருநாளை நாளை புதன் கிழமை 10 ஆம் திகதி கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக் குழுத் தலைவர் கலீபதுல் குலபா மௌலவி எம்.பி.எம்.ஹிஷாம் பத்தாஹி உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.

கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் அதன் தலைவர் தாஹிர் ரஷீன் தலைமையில் இடம்பெற்ற மாநாட்டில் பெரிய பள்ளிவாவசலின் பிறைக்கு குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் தலைவர் உள்ளிட்ட பிரதி நிதிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள், வளிமண்டவியல் திணைக்கள சிரேஷ்ட அதிகாரி, ஸ்ரீ லங்கா ஷரீஆ கவுன்சில் பிரதிநிதிகள், ஏனைய பள்ளிவாசல்கள், தரீக்காக்கள், ஸாவியாக்ளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *