பொலிஸ் மா அதிபருக்கு அழைப்பாணை
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை நாளை (05) நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தலைமை பொலிஸ் பரிசோதகர் சிலருக்கு இடமாற்றம் வழங்கியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சில அடிப்படை உரிமை மனுக்கள் குறித்து ஆராய்வதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
