உள்நாடு

இன்று அனுராதபுரத்தில் மொட்டுக் கட்சியின் பேரணி.மக்கள் வெள்ளத்தில் மைதானம் நிரம்பும்.ரோஹித கருத்து.

“மைதானத்தில் இடம் பற்றாக்குறையாக இருக்கும்..நாம் மிகவும் வெற்றிகரமான பேரணியை நடத்துவோம்” – ரோஹித அபேகுணவர்தன

பொஹொட்டுவ (SLPP) கட்சியின் தொடக்க வெற்றிகரமான பேரணி அனுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் முகாமின் வெற்றிகரமான தொடக்கம் எப்போதும் அனுராதபுரத்திலிருந்தே தொடங்குகிறது 

நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ள போதிலும், திட்டமிட்டபடி இந்த பேரணி மிகச் சிறப்பாக நடைபெறும் என ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார் 

பொதுமக்கள் மிதிவண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், டிராக்டர்கள் மற்றும் பஸ்கள் மூலம் பேரணிக்கு வருவார்கள் என்பதால் மைதானத்தில் இடம் போதாமல் போகலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது 

விவசாயிகளின் பிரச்சினைகள், மக்களின் அவதிகள் மற்றும் அரசாங்கத்தின் மக்கள் விரோத செயற்பாடுகளுக்கு எதிராகவே இந்த பேரணி நடத்தப்படுகிறது 

பாராளுமன்றத்திலும் வெளியிலும் பலமான எதிர்க்கட்சியாக செயல்பட்டு, அரசாங்கத்தின் தவறான போக்கை சுட்டிக்காட்டுவதே இதன் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *