கற்பிட்டி பிரதேச காழி நீதிபதியாக மீண்டும் நூஹூ லெப்பை நியமனம்

கற்பிட்டி பிரதேச காழி நீதிபதியாக மூன்றாவது முறையாகவும் ஓய்வு நிலை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ் எல் நூஹூ லெப்பை 2026 செப்டம்பர் முதலாம் திகதி முதல் நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலகத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்
கடந்த 2018 ம் ஆண்டு முதல் கற்பிட்டி பிரதேச காழி நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர் அதன் பின்னர் இடம்பெற்ற இரண்டு நேர்முக தேர்வுகளின் போதும் தெரிவு செய்யப்பட்டு தொடர்ந்து எட்டு வருடங்களாக காழி நீதிபதியாக செயல்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
