CCIB க்கு அழைத்துச் செல்லப்பட்ட பஸ் லலித்
லலித் கன்னங்கர என்ற ‘பஸ் லலித்’ சற்றுமுன் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (CCIB) அழைத்துச் செல்லப்பட்டார்.
டுபாயில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர என்ற ‘பஸ் லலித்’ இன்று அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
தொடர்ந்து இவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் இவரை தொடர்ந்து பலர் கைது செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
