உள்நாடு

அடுத்த ஆண்டுக்கான பொதுப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

2027ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள முக்கியப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட ஊடக அறிக்கையில், தரம் 5ற்கான புலமைப்பரிசில் பரீட்சை 2027 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 1 ஆம் திகதி நடைபெறும்.

க.பொ.த உயர்தர பரீட்சை (A/L) 2027ஆம் ஆண்டு ஓகஸ்ட் 3 முதல் ஓகஸ்ட் 28 வரை நடைபெற உள்ளது.

பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சை 2027 ஆம் ஆண்டு ஒக்டோபர் 24 ஆம் திகதி நடத்தப்படும்.

இதற்கிடையில், க.பொ.த சாதாரண பரீட்சை (O/L) 2027 டிசம்பர் 7 முதல் டிசம்பர் 17 வரை நடைபெறும்.

பரீட்சை திகதிகளைத் பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அறிவித்தார்.

அறிவிக்கப்பட்ட திகதிகளை குறித்துக்கொண்டு, பரீட்சைகளுக்குத் தேவையான தயாரிப்புகளைச் செய்யுமாறு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலைகளுக்கும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *