ஓட்டமாவடி ஆற்றில் குதித்த பெண்; ஓடோடி வந்து காப்பாற்றிய இளைஞர்கள்!
ஓட்டமாவடி ஆற்றில் குதித்த பெண் ஒருவரை இரு இளைஞர்கள் காப்பாற்றி மீட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (28) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
ஓட்டமாவடி பாலத்தினால் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர் தான் தொலைபேசியில் உரையாட வேண்டும் என முச்சக்கர வண்டியை நிறுத்துமாறு சாரதியுடன் வேண்டியுள்ளார்.
குறித்த பெண் சொன்ன கதையைக் கேட்டு முச்சக்கர வண்டியை சாரதி நிறுத்திய போது பெண் திடீரென ஆற்றில் குதித்து தத்தளித்துள்ளார்.
இதனைக் கண்டு கொண்ட இரு இளைஞர்கள் ஆற்றங்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தோணி ஒன்றினை எடுத்துக் கொண்டு பெண்ணை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



(எச்.எம்.எம்.பர்ஸான்)
