அதிகரிக்கும் களனி கங்கை நீர் மட்டம்; தாழ் நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு அதனை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ள நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் பியகம, கடுவெல, கொலன்னாவ, களனி, வத்தளை, கொழும்பு, சீத்தாவாக ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்படும தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
