மாலைதீவு, இலங்கை ஜனாதிபதிகள் இன்று இரு தரப்பு பேச்சுவார்த்தை; முக்கிய ஒப்பந்தங்களும் கைச்சாத்து
இலங்கை வருகை தந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி முஹம்மத் முய்சு மற்றும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று முற்பகல் சந்தித்து இரு தரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சு நடாத்தவுள்ளனர்.
இதன்போது பல்வேறு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன. இதேவேளை நேற்று இலங்கை வந்த மாலைதீவு ஜனாதிபதி முஹம்மத் முர்ஸிக்கு நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.






