கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல்
கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவின் பங்கேற்புடன், புத்தளம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சேவை கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் விவசாயம் மற்றும் மீன்வள அமைச்சு மற்றும் கால்நடை உற்பத்தி செயலகத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, தேசிய மக்கள் சக்தியின் பிரதி அமைப்பாளரும், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கயன் ஜனக, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஜே.எம். பைசல் மற்றும் அஜித் கிஹான் ஆகியோரும், கூட்டுறவு அபிவிருத்தியில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் கலந்துகொண்டனர்.
கூட்டுறவு சங்கங்களின் பல்வேறு பல்வேறு விதமான விடயங்கள் இந்த கூட்டத்தில் விசேடமாக கலந்துரையாடப்பட்டன.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
