ரி20 உலகக் கிண்ணம்; இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியை பகிஷ்கரிக்கும் பாகிஸ்தான்
இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ரி20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்பதற்கு அந்த நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இந்த விடயத்தை நேற்று எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறவிருந்த முதல் சுற்று குழுநிலை போட்டியில் மாத்திரம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி களம் இறங்காது என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
