கண்டி கல்விப் பணிமனையில் நாளை வாணி விழா..!
கண்டி கல்வி வலயப் பணிமனையின் தமிழ்ப் பிரிவு ஏற்பாடு செய்துள்ள வாணி விழா நாளை (11) கண்டி வலயக் கல்விப் பணிமனையின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
கண்டி வலயக் கல்விப் பணிப்பாளர். டி சி ஐ. அந்தரகே இந்நிகழ்வுக்கு தலைமை தாங்குவார்.
இந்த வாணி விழாவை முன்னிட்டு பல்வேறு கலை, கலாசார நிகழ்ச்சிகளும் மேடையேற்றப்படவுள்ளதாக கண்டி கல்வி வலய தமிழ்ப் பிரிவின் கோட்டக் கல்விப் பணிப்பாளர் செ. தமிழ்ச் செல்வன் தெரிவித்தார்.
(ரஷீத் எம். றியாழ்)
