உள்நாடு

சாய்ந்தமருது டொக்டர் எஸ்.நளிமுதீன் எழுதிய “இஸ்லாமிய பொற்காலம்” கவிதை நூல் வெளியீட்டு விழா

சாய்ந்தமருது டொக்டர் எம்.நளிமுதீன் எழுதிய “இஸ்லாமிய பொற்காலம் ” கவிதை நூல் வெளியீட்டு விழா மாளிகைக்காடு பாவா ரோயல் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

சட்டத்தரணி மர்யம் மன்சூர் நளிமுதீன் அவர்களின் நெறியாள்கையில் ஏ.ஆர்.மன்சூர் பெளண்டேஸன் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மேற்படி நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதேசத்திலுள்ள இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நூல் வெளியீட்டின் மூலம் கிடைத்த பண அன்பளிப்புகள் நாணல் பெண்கள் இலக்கிய வட்டத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது.
(அஸ்ஹர் இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *