அ.இ.ஜ.உலமா புத்தளம் கிளையில் புதன்கிழமைகளில் மஜ்லிஸுல் இஸ்லாஹ் நிகழ்வு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் காரியாலயத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை மஜ்லிஸுல் இஸ்லாஹ் (இஸ்லாஹ் பகுதி குழு) செயற்பட்டு கொண்டு வருகிறது.
இக்குழுவில் சமூகம் சார்ந்த விடயங்கள் மற்றும் குடும்பம் சார்ந்த பிரச்சனைகளை விசாரித்து சுமுகமான நிலையை உறுவாக்குகிறது.
இதுவரைக்கும் சுமார் 25 க்கும் மேற்பட்ட விடயங்கள் விசாரித்து அதற்கான தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இக்குழுவுக்கு அஷ்ஷேக் ஸல்மான் இஹ்ஸானி அவர்கள் தலைமை தாங்குகிறார்.

ஊடகப் பிரிவு
அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா
புத்தளம்
நகரக் கிளை
