ஞானசார தேரருக்கு மைத்திரி வழங்கிய மன்னிப்பு செல்லுபடியாகாது.உயர்நீதிமன்றம் அறிவிப்பு.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு செல்லுபடியாகாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி, ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பின் சட்டபூர்வ செல்லுபடித்தன்மை தொடர்பில் உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
குறித்த தீர்ப்பு தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
