அரச சிறுவர் ஓவிய விழா 2026: ஜூலை 15 முதல் ஓகஸ்ட் 31 வரை படைப்புகளைச் சமர்ப்பிக்கலாம்
இலங்கைக் சிறுவர்களின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்திப் பாராட்டும் முதன்மை நோக்கத்துடன் இந்த ஆண்டு அரச சிறுவர் ஓவிய விழா நடாத்தப்படுகிறது.
நாட்டின் ஒவ்வொரு பிரதேச செயலகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்களின் பங்கேற்புடன் இந்த விழா நடைபெறும்.
இந்த அரச சிறுவர் ஓவிய விழாவானது, ஒரு சிறு கலைஞராக ஆவதற்குத் தேவையான திறன்களைப் பெறுவதையும், அதற்கான படைப்பாற்றல் சிந்தனைத் திறன்களை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
புத்த சாசனம், சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சு, கலாசார விவகாரங்கள் திணைக்களம் மற்றும் அரச காட்சிக்கலைகள் உப-குழு ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘2026 அரச சிறுவர் ஓவியத் திருவிழா’விற்கான படைப்புகளைச் சமர்ப்பிக்கும் நிகழ்வு, 2026 ஜூலை 15 முதல் ஓகஸ்ட் 31 வரை கொழும்பு 07, தேசிய கலைக்கூடத்தில் நடைபெற உள்ளது.
மேலதிக தகவல்களுக்கு செயலாளர், அரச காட்சிக்கலைகள் உப குழு: 0112882551 / 0112872031
