உள்நாடு

அசாத் சாலியை கைது செய்தது சட்டவிரோதமானது; உயர்நீதிமன்றம் தீர்ப்பு

மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை 2021ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்தமை சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதற்காக அவருக்கு 75,000 ரூபா இழப்பீடு வழங்க வேண்டுமென பிரதிவாதிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன், முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்டோர் இதற்குப் பொறுப்பானவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *