உள்நாடு

மூத்த ஊடகவியலாளர் என்.எம். அமீன் கனடாவில் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்

இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும், சமூக ஆர்வலருமான என். எம். அமீனை கௌரவிக்கும் வகையிலான விசேட சந்திப்பும், பாராட்டு விழாவும் கனடாவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

‘ஸ்ரீ லங்கா முஸ்லிம் கம்யூனிட்டி கனடா’ (Sri Lanka Muslim Community Canada) அமைப்பின் ஏற்பாட்டில், கனடாவின் ஸ்கார்பரோவில் அமைந்துள்ள அமானா மாநாட்டு மண்டபத்தில் (Amana Conference Centre, Scarborough) இந்நிகழ்வு இடம்பெற்றது.

ஊடகத்துறை மற்றும் சமூக மேம்பாட்டிற்காகத் தமது வாழ்நாளை அர்ப்பணித்துச் சேவையாற்றிய என். எம். அமீனின் பணிகளைக் கௌரவிக்கும் வகையிலும், அவருடன் கனேடிய வாழ் மக்கள் கலந்துரையாடும் வகையிலும் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த விசேட சந்திப்பு மற்றும் பாராட்டு விழாவில் கனேடிய வாழ் இலங்கை சமூகப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் நலன்புரி அமைப்பினர் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இவர் தற்போது ‘உதயம்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும், முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா (Muslim Council of Sri Lanka) தலைவராகவும் பொறுப்பு வகிக்கும் என். எம். அமீன், தினகரன் உள்ளிட்ட லேக் ஹவுஸ் தமிழ் பிரசுரங்களின் முன்னாள் முகாமைத்துவ ஆசிரியராகவும், நவமணி தேசியப் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியராகவும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் (Sri Lanka Muslim Media Forum) முன்னாள் தலைவராகவும் பணியாற்றி ஊடகத்துறையில் முத்திரை பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *