உள்நாடு

சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தை மதித்து, முஸ்லிம்கள் ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்; ஆதம்பாவா எம்.பி இன் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தை மதித்து, முஸ்லிம் மக்கள் ஹஜ் பெருநாளை உலக சமூகத்திற்கு சமூக நலனின் மதிப்பைக் கொண்டுவரும் நாளாக புனித ஈதுல்- அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளை முஸ்லிம் மக்கள் கொண்டாடுகின்றார்கள் என அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முஸ்லிம்களின் வாழ்க்கையை வடிவமைக்கும் இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஹஜ்ஜும் ஒன்றாகும். அமைதி, சமாதானம், சுபீட்சம், சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தை மதித்து, முஸ்லிம் மக்கள் ஹஜ் பெருநாளை உலக சமூகத்திற்கு சமூக நலனின் மதிப்பைக் கொண்டுவரும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.

உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கான முஸ்லிம்களுக்கு மத்தியில், வல்ல அல்லாஹ்வின் முன் ஒரே நோக்கத்துடன் தங்களது பாவக்கறைகளை நீக்கிக் கொள்வதற்கு, இறுதிக் கடமையான ஹஜ் யாத்திரிகர்களால் மேற் கொள்ளப்படுகிறது. புனித ஹஜ் கடமையை நிறைவேற்றியவுடன் அன்று பிறந்த பாலகன் போல ஹஜ் யாத்திரிகர்கள் அங்கிருந்து வெளியேறுகின்றனர்.

இன்று புனித ஈதுல்- அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் உலகிலுள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் எனது ஹஜ்ஜுப்பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *