விளையாட்டு

உலகக்கிண்ண தொடரிலிருந்து விலகுகிறார் மதீஷ பத்திரண

இலங்கை அணியின் இளம் வலதுகை வேகப்பந்து வீச்சாளரான மதீஷ பத்திரண நடைபெற்று வரும் உலக கிண்ண ரி20 கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார். 

இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்த தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அவுஸ்திரேலியாவுடன் இடம்பெற்ற போட்டியின் போது, மதீஷ பத்திரணவின் இடது காலில் காயம் ஏற்பட்டிருந்தது. 

அவர் காயத்தில் இருந்து மீள்வதற்கு சிறிது காலம் தேவை என்பதால், இந்த தொடரில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடப்படுகின்றது. 

இந்நிலையில் அவருக்கு பதிலாக டில்ஷான் மதுஷங்க அல்லது நுவன் துஷார ஆகியோரில் ஒருவர் அணியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *