சுப்பர் 8 க்குள் பிரவேசித் இலங்கை.

இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் இன்றிரவு நடைபெற்ற ரி 20 உலகக் கிண்ண போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்களால் அமோக வெற்றியீட்டியதையடுத்து சுப்பர் 8 க்குள் பிரவேசிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 182 ஓட்டங்களைப் பெற்று அமோக வெற்றியை ஈட்டியது.பெத்தும் நிஸ்ஸங்க சதமடித்து அசத்தினார்.
