இலங்கைக்கு உதவிக் கரம் நீட்டியது மியன்மார்
மியன்மார் குடியரசினால் இலங்கை அரசாங்கத்திற்கு அவசர நிவாரணமாக 100,000 அமெரிக்க டொலர்கள் நேற்று (09) அன்பளிப்புச் செய்யப்பட்டது.
மியன்மார் தூதுவர் மர்லர் தான் ஹ்டைக் (Marlar Than Htaik) இனால் வெளிநாட்டு அலுவல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் திடம் உத்தியோகபூர்வமாக அன்பளிப்புச் செய்யப்பட்டது.
இதனிடையே மியன்மார் தொடர்ந்தும் வழங்கும் ஒத்துழைப்பிற்கு அமைவாக 500 மெற்றிக் தொன் அரிசியை இலங்கை மக்களக்காக வழங்குவதற்கும் திட்டமிட்டுள்ளது.
