ஓட்டமாவடி பிரதேச சபை மக்கள் காங்கிரஸ் வசமானது – தவிசாளராக எம்.எஸ்.ஹலால்தீன்

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட எம்.எஸ்.ஹலால்தீன் ஏகமனதாகத்தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது, ஐக்கிய தேசியக்கட்சி, சுயேட்சைக்குழு உறுப்பினர், தமிழரசுக்கட்சி உறுப்பினர் என தலா ஒவ்வொரு உறுப்பினர்களும் ஆதரவுகளை வழங்கியிருந்தனர்.
ஏலவே, தவிசாளர் பதவியைப்பெற்றுக்கொண்ட எம்.எச்.எம்.பைரூஸ் கட்சியின் தீர்மானத்தை மீறிய காரணத்தினால் அவரின் உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதைத்தொடந்து தவிசாளர் பதவிக்கான வெற்றிடத்திற்கான தெரிவு இன்று (20/11/2025) கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற போதே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சபையைக் கைப்பற்றியுள்ளது.


(எஸ்.எம்.எம்.முர்ஷித், எச்.எம்.எம்.பர்ஸான்)
