மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் சாரணத் தலைவர்களுக்கான பயிற்சி நெறி
இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதம ஆணையாளரின் வழிகாட்டலின் கீழ் தேசிய பயிற்சி பிரிவின் ஏற்பாட்டில் சாரணத்தலைவர்களுக்கான பயிற்சி நெறி அண்மையில் மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
“வினைத்திறன் மிக்க தலைமைத்துவத்திற்காக எம்மை நாம் மேம்படுத்திக கொள்வோம் எனும் தொனிப்பொருளில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாணம் திருக்கோணமலை, மட்டக்களப்பு, அம்பாரை மாவட்டங்களிருந்து தருச்சின்னம் பயிற்சியை நிறைவு செய்த மாவட்ட ஆணையாளர்கள், ,உதவி மாவட்ட ஆணையாளர்கள், சாரணத்தலைவர்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இலங்கை சாரணர் சங்கத்தின் தலைமைப் பயிற்சி ஆணையாளர், முன்னாள் பயிற்சி ஆணையாளர், தலமைகத்தின் பிரதி, உதவி ஆணையாளர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கி வைத்தனர்.








(றிபாஸ்)
