உள்நாடு

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை தொழிற்சங்க நடவடிக்கை

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (17) தொழிற்சங்க நடவடிக்கையை தொடங்க முடிவு செய்துள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் சுகாதார சேவை மற்றும் மருத்துவர்களின் பிரச்சினைகளை ஜனாதிபதி முறையாக தீர்க்கவில்லையென கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையை தொடங்க முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அரசாங்க தரப்பினருக்கு அறிவித்துள்ளதாகவும், அதற்கு சாதகமான பதில் கிடைக்காததால், இந்த தொழிற்சங்க நடவடிக்கையை தொடங்க தங்கள் சங்கம் நடவடிக்கை எடுத்ததாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *