தலாவ பஸ் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு ; 40 பேர் காயம்
அநுராதபுரம், தலாவ பகுதியில் தனியார் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதார். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
இதன்போது சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் தம்புத்தேகம மற்றும் அநுராதபுரம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
