உள்நாடு

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 14 பேர் கைது

பருத்தித் துறை கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய கடற்றொழிலாளர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கடற்றொழிலாளர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் வருகைதந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு, பருத்தத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *