உள்நாடு

சிறந்த அறிவுக் கேந்திரமாக கொழும்பு துறைமுக நகர் தெரிவு

​இலங்கையின் முதன்மையான ஸ்மார்ட் சிட்டி திட்டமான கொழும்பு துறைமுக நகரம் (Port City Colombo), இன்டலிஜென்ஸ் குளோபல் பிரீ ஸோன்ஸ் ஒப் த இயர் 2025 (fDi Intelligence Global Free Zones of the Year 2025) விருதுகளில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் சிறந்த அறிவுக் கேந்திரமாக தெரிவு செய்யப்பட்டு, இலங்கைக்கு ஒரு முக்கிய மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது.

​269 ஹெக்டேர் மீள் பெறப்பட்ட நிலத்தில் நிர்மாணிக்கப்பட்டு, 2021 ஆம் ஆண்டு முதல் ஒரு சிறப்புப் பொருளாதார வலயமாய் செயற்பட்டு வரும் கொழும்பு துறைமுக நகரம், சேவைத் துறை முதலீடுகளுக்கான ஒரு மையமாக மாறியுள்ளது.

​இதன் முதலீட்டாளர் நட்பு கொள்கைகள், வரிச் சலுகைகள் மற்றும் சட்ட கட்டமைப்புகளை நீதிபதிகள் குழு பாராட்டியது.

​இந்த அங்கீகாரம், உலகளாவிய சேவைத் துறை அந்நிய நேரடி முதலீட்டை (FDI) ஈர்ப்பதில் இலங்கையின் வளர்ந்து வரும் பங்கை எடுத்துக்காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *