செப்டம்பரில் மட்டும் 158971 சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருகை
செப்டெம்பர் மாதத்தில் மொத்தம் 158,971 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழுவின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இந்தியாவிலிருந்து மொத்தம் 49.697 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இது 31.3% ஆகும்.
மேலும் செப்டெம்பர் மாதத்தில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 10,752 பேரும் சீனாவிலிருந்து 10,527 பேரும், ஜெர்மனியிலிருந்து 9,344 பேரும் அவுஸ்திரேலியாவிலிருந்து 9,105 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதற்கிடையில் 2025ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,725,494 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களுள் 375,292 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், 161,893 பேர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள், 122,144 பேர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் 106,988 பேர் ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள் என இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.