உள்நாடு

எல்ல வாகன விபத்து.உயிரிழந்தோருக்கு 10 இலட்சம் இழப்பீடு

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் 4ம் திகதி இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக இழப்பீடு வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் சுற்றுலா சென்ற பேருந்தொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்ததுடன் 19 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *