உள்நாடு

மீண்டும் ஆரம்பமாகும் இலங்கை குவைத் விமான சேவைகள்

இலங்கைக்குப் பயணிகள் விமானங்களை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக குவைத் ஏயார்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி முதல் இந்த சேவையை மீள ஆரம்பிக்கவுள்ளது.

குவைத்தின் தேசிய விமான சேவைகள் ஞாயிறு, புதன், வியாழன், மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முன்னெடுக்கப்பட உள்ளது.

பயணிகளின் வசதி கருதியே இலங்கைக்கான விமானங்களை மீண்டும் இயக்க தீர்மானித்துள்ளதாக குவைத் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *