உள்நாடு

பலத்த மழை பெய்யும் வாய்ப்பு

மேல் , சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (31) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் தெரிவித்துள்ளது.

இதேவேளை வடமேற்கு மாகாணம் மற்றும் யாழ் மாவட்டத்தின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம்  எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள் வடக்கு, வடமேல் மாகாணங்கள், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 4 40 -50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பலத்த காற்று காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம்  பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

மேலும் இன்று (31) பிற்பகல் 12:10 மணியளவில் பத்தலங்குண்டுவ, மதவாச்சி, ஹொரவப்பொத்தான , கிண்ணியா ஆகிய பிரதேசங்களில் சூரியன் உச்சம் கொடுக்கும் எனவும்  வளிமண்டலவியல் திணைக்களம்  எதிர்வு கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *