உள்நாடு

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல நிபுணர் குழுவின் பணிகள் செப்டம்பரில் நிறைவு..!

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வரைவதற்காக அமைச்சரவையின் ஒப்புதலின் கீழ் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று அந்த குழுவின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட குழு நேற்று (27) பிற்பகல் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சில் கூடிய போதே, ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

தற்போது சட்டமூலத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் இரண்டாவது முறையாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தலைவர் கூறினார். 

நாட்டில் அமுலாகியுள்ள 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை இரத்து செய்து, புதிய சட்டமூலத்தை வரைவதற்கு நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டது. 

புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவது, நவீன உலகளாவிய பயங்கரவாத சவால்களுக்கு முகம் கொடுப்பது, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் தனிநபர்களின் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகளுக்கு இணங்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *