உள்நாடு

ரணிலின் பாட்டிக்குச் சொந்தமான 43 ஏக்கரைக் கொண்ட வெலிக்கடை நிலத்திற்கே ரணில் அழைத்துச் செல்லப்பட்டார்

– வஜிர அபேவர்தன ஊடகங்களுக்கு கருத்து

“ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பாட்டிக்குச் சொந்தமான 43 ஏக்கரைக் கொண்ட வெலிக்கடை நிலத்திற்கே அவர் அழைத்துச் செல்லப்பட்டார்” என்று, ஐ.தே.க. வின் தவிசாளர் வஜிர அபேவர்தன, இன்று (27) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.

“வெலிக்கடை சிறைச்சாலை அமைந்திருக்கும் காணியின் அசல் உரிமையாளர்கள், ரணில் விக்கிரமசிங்க அவர்களும் அவரது குடும்பத்தினரும் ஆவர். ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு, அவர் தனது குடும்பத்திற்குச் சொந்தமான அதாவது அவரது பாட்டிக்குச் சொந்தமான 43 ஏக்கரைக் கொண்ட வெலிக்கடை நிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவமாகும். வெலிக்கடைச் சிறைச்சாலை அமைந்துள்ள நிலத்தின் அனைத்து நிலப் பதிவுகளும் என்னிடம் உள்ளன. அத்தகைய தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் இதை எதிர்கொள்ள வேண்டியது, மிகவும் சோகமான நடத்தை என்று தான் சொல்ல வேண்டும்”.

இவ்வாறு வஜிர அபேவர்தன, இன்று (27) ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *