உள்நாடு

பொது இடங்களில் வெற்றிலை எச்சில் துப்பினால் இனி சட்ட நடவடிக்கை

அதிகபட்சமாக 25 ஆயிரம் அபராதம்

இன்று (27) முதல் வெற்றிலை உண்டு, பொது இடங்களில் எச்சில் துப்பும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் பணியை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இலங்கையில் பஸ் தரிப்பிடங்கள், பொது இடங்கள் என அனைத்து பகுதிகளிலும் வெற்றிலை எச்சில்களை அதிகமாகக் காணக்கூடியதாக உள்ளது.

இது குறித்து பொது மக்கள், தொடர்ச்சியாக பொது சுகாதாரப் பரிசோதகர்கள் உட்பட உரிய அரச நிறுவனங்களுக்கு முறைப்பாடுகளை அளித்து வந்தனர்.என்றாலும், இந்த விடயத்தில் எவ்வித நடவடிக்கைகளும் கடந்த காலங்களில் எடுக்கப்படவில்லை. இதன்காரணமாக, தற்போதைய அரசாங்கம், பொது இடங்களில் வெற்றிலை உண்டு எச்சில் துப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளது.

இன்றைய தினம் (27) கம்பஹா பொது பஸ் தரிப்பிடம் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும், இது குறித்து பொது சுகாதாரப் பரிசோதகர்களால் விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகள் இடம்பெற்றன. வெற்றிலை எச்சிலை, பொது இடங்களில் துப்பும் நபர்களுக்கு எதிராக குறைந்த பட்டசம் 3 ஆயிரம் ரூபாவும், அதிக பட்சமாக 25 ஆயிரம் ரூபாவும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

குறிப்பாக, பஸ் சாரதிகள், வாகனச் சாரதிகள் வாகனங்களைச் செலுத்தும் போது, வெற்றிலை எச்சிலை பாதைகளில் அதிகமாகத் துப்பிச் செல்வாக, பொது சுகாதாரப் பரிசோதகர்கள் கூறியதுடன், இவர்களுக்கு கடும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதுடன், பயணிகள் உட்பட பாதசாரிகளுக்கும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. விரைவில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும், பொது சுகாதாரப் பரிசோதகர்கள் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *