பேருவளை மனாரா பீச் ஹோட்டலில் நாளை Cake picnic நிகழ்வு.
களுத்துறை மாவட்டத்தில் முதல் முறையாக கேக் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கேக் பிக்நிக்(cake picnic) எனும் நிகழ்வு பேருவளை மருதானை மனாரா பீச் ரெசோட்டில் எதிர்வரும் 27ம் திகதி புதன்கிழமை (27-8-2025) பி.ப 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
கார்டன் ஸ்லைஸ் (garden slice) எனும் தொனிப்பொருளின் கீழ் பேருவளையில் பிரசித்தி பெற்ற கேக் தயாரிப்பாளர்களான சஸ்லா உனைஸ் ( cake by shazla unais), அரூஸா ஆஸாத் (aroosa bakes), ரிப்பத் சதா ரியால் (rr.cake creatives),இச்ரா அஸாட் (cakeish) ஆகியோரினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுய தொழிலாக கேக் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கேக் தயாரிப்பாளர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி அவர்களது தொழிலில் இஸ்திரத் தன்மையை அதிகரிப்பதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேருவளை, களுத்துறை,அடுளுத்கமை, தர்கா நகர்,வியங்கல்லை,காலி மற்றும் கொழும்பு போன்ற பிரதேசங்களில் இருந்து தமது கேக் தயாரிப்புகளுடன் கேக் தயாரிப்பாளர்கள் கலந்து பயன்பெற வுள்ளனர்.
பேருவளையில் கேக் தயாரிப்பு உபகரணங்கள், மூலப்பொருட்கள் விற்பனையாளராக திகழும் பேக் கெலரி ஸெரன்டிப் (cake gallery serendib) நிறுவனம் பிரதான அனுசரனை வழங்குவதோடு இலங்கையின் பிரதான தயாரிப்பாளரான அஸ்ட்ரா astra ,டம் டம் dum dum மற்றும் பய்ரஹா பாம்ஸ் தனியார் நிறுவனம் ( bairaha fams pvt limited) ஆகிய நிறுவனங்களும் அனுசரணையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.இந்த நிகழ்வில் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளதாக பேருவளை பகுதி முன்னனி கேக் தயாரிப்பாளரான சஸ்லா உனைஸ் தெரிவித்தார்.
(பேருவளை பீ.எம்.முக்தார்)