உள்நாடு

யூடியூபர் கருத்துக்கு அரசு வழங்கிய விளக்கம்.

அரசாங்கம் எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கைகளிலும் தலையிடவில்லை என்று சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அனைத்து நிறுவனங்களுக்கும் சுயாதீனமாக விசாரணைகளை மேற்கொள்ள இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது குறித்து யூடியூபர் ஒருவர் முன் கூட்டியே தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.

“சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவது மட்டுமே அரசாங்கத்தின் பொறுப்பு. நிதி மோசடி, குற்றம் அல்லது ஊழல் என எதுவாக இருந்தாலும், விசாரணைகள் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக நடத்தப்படுகின்றன.

சட்டம் அனைவருக்கும் சமமாகப் பொருந்தும் என்பதற்கு இந்த வழக்கை ஒரு உதாரணமாகக் காணலாம், ”என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.மேலும் கருத்து தெரிவித்த அவர், பத்திரிகையாளர் விக்டர் ஐவன் முன்கூட்டியே நீதிமன்றத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த ஒரு நிகழ்வை மேற்கோள் காட்டி, இதேபோன்ற கணிப்புகள் முன்னர் செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

“சில வழக்குகள் எவ்வாறு தொடர்கின்றன என்பதைப் பொறுத்து, யார் வேண்டுமானாலும் கணிப்புகளைச் செய்யலாம். சிலர் பிணை வழங்கப்படும் என்று நினைக்கலாம், சிலர் பிணை கிடைக்காது என்று நினைக்கலாம்.இவை யூகங்களைப் போன்றவை – சில நேரங்களில் அவை சரியாகவும், சில நேரங்களில் தவறாகவும் மாறும். ஆனால் இதுபோன்ற கணிப்புகள் செல்வாக்கு செலுத்துவதாக யாராவது பரிந்துரைத்தால், அது நீதிமன்ற அவமதிப்புக்கு சமமாகும்,” என்று அமைச்சர் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *