Tuesday, August 12, 2025
Latest:
உள்நாடு

சபாத் இல்லத்தை அகற்ற பொத்துவில் பிரதேச சபை தீர்மானித்தால் அரசாங்கம் மேலதிக நடவடிக்கை எடுக்கும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தங்களிடம் உறுதியளிப்பு..! -ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மிப்லால்

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் அவர்களுக்கும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (11/08/2025) மாலை அமைச்சில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால் அம்பாறை மாவட்ட பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் இயங்கும் சபாத் இல்லம் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறித்த சபாத் இல்ல சட்டரீதியான அனுமதி தொடர்பிலும் அமைச்சருடன் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் சபாத் இல்லத்தை மூடிவிடுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், பொத்துவில் பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகைக்குள் இருப்பதனையும் அதன் தவிசாளராக தற்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் இருப்பதையும் அமைச்சருக்கு தெரிவித்ததுடன் குறித்த சபாத் இல்லத்தின் அருகில் அமைந்துள்ள பள்ளிவாசல் தொடர்பிலும் இந்த பள்ளிவாசல் வளாகத்தில் பாதுகாப்பு படையினரின் வாகன தரிப்பிடம் அமைந்துள்ள விடயம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

தொடர்ந்தும் அந்த பிரதேசத்தை சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் வடிவமைத்து இலங்கை முஸ்லிம்களின் வரலாறுகளை அறிந்து கொள்ளும் விதமாக அமைக்க வேண்டிய அவசியம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இவற்றை கேட்டறிந்த அமைச்சர் விஜித ஹேரத், சபாத் இல்லத்தை மூடிவிடுவது தொடர்பில் பொத்துவில் பிரதேச சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினால் மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என்றார்.

மேலும் சபாத் இல்லத்தின் அருகில் அமைந்துள்ள பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு படையினரின் வாகன தரிப்பிடத்தை அகற்ற உடனடியாக தான் நடவடிக்கை எடுப்பதாகவும் எங்களிடம் அமைச்சர் உறுதியளித்தார்- என்றார்

இச்சந்திப்பின்போது, அம்பாறை மாவட்டம் பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் செயல்படும் சபாத் இல்லம் (Sabbath House) மற்றும் அப்பகுதியில் உள்ள பிற விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

சந்திப்புக்குப் பிறகு ஊடகங்களுக்குப் பேட்டியளித்த மௌலவி முஹம்மத் மிப்லால், சபாத் இல்லத்தின் சட்டரீதியான அனுமதி குறித்தும், அதை நிரந்தரமாக மூடுவது குறித்தும் அமைச்சருடன் பேசியதாகத் தெரிவித்தார்.

சபாத் இல்லத்தை மூடுவதற்கு பொத்துவில் பிரதேச சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினால், அது குறித்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என அமைச்சர் உறுதியளித்துள்ளதாக அவர் கூறினார்.

மேலும், அந்தப் பகுதியில் உள்ள பள்ளிவாசல் மற்றும் அதன் வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு படையினரின் வாகன தரிப்பிடம் குறித்தும் அமைச்சரிடம் விவாதிக்கப்பட்டது. இந்த வாகன தரிப்பிடத்தை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் உறுதி அளித்ததாக மௌலவி மிப்லால் தெரிவித்தார்.

அத்துடன், பொத்துவில் பிரதேசத்தை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாகவும், இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை அறிந்து கொள்ளும் விதமாகவும் வடிவமைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டது.

பொத்துவில் பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதையும், அதன் தவிசாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் உள்ளார் என்பதையும் அமைச்சருக்குத் தெரிவித்ததாக மௌலவி மிப்லால் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *